விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி, ஆர்த்தி ஆகியோர் போட்டியாளர்களாக மீண்டும் நுழைந்துள்ளார்கள்.
சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு பிரபல நடிகை பிந்து மாதவி போட்டியாளராக உள்ளே நுழைந்தார். அதன்பிறகு புதுவரவாக நடிகை சுஜா, இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகையும் விஜேவுமான காஜல் ஆகியோர் புதிய போட்டியாளர்களாக அறிமுகமானார்கள்.
இருப்பினும் ஓவியா, ஜூலி ஆகியோரின் வெளியேற்றத்துக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்தது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. புதிதாக உள்ளே நுழைந்த நால்வரும் சர்ச்சைகளில் பெரிதாக ஈடுபடாமல், அமைதியான முறையில் நடந்துகொள்வதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்பு போல சுவாரசியமும் பரபரப்பும் இல்லாமல் போயின.
இந்நிலையில் முன்னாள் போட்டியாளர்களான ஆர்த்தி, ஜூலி ஆகிய இருவரையும் மீண்டும் அழைத்துள்ளது விஜய் டிவி. இன்றைய பிக் பாஸ் விளம்பரத்தில் இருவரும் இடம்பெற்றுள்ளார்கள். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் சுவாரசியத்துக்குப் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#VivoBiggBoss வà¯à®à¯à®à®¿à®²à¯ à®à®©à¯à®±à¯..@Vivo_India #BiggBossTamil pic.twitter.com/BRQhMpErkK
â Vijay Television (@vijaytelevision) August 28, 2017
#VivoBiggBoss à®à®²à¯ à®à®©à¯à®±à¯.. @Vivo_India #BiggBossTamil pic.twitter.com/PpKyJ6H1OG
â Vijay Television (@vijaytelevision) August 28, 2017
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

பங்கிபூரில் 64 ஆயிரம் வாக்குளுடன் பிரசாந்த் கிஷோர் வரலாற்று வெற்றி!

அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ்! அடுத்தடுத்து வெளியான பட அறிவிப்புகள்!

அமைச்சரவையில் இடமில்லை! பதவியை ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



