உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

எட்டு வேடங்களில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்! 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில், அவர் எட்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:32 pm IST

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில், அவர் எட்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ . இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், நடிகர்  கவுதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நிகரிகா என்பவர் கதாநாயகியாக இப்படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தில் பழங்குடியினக் குழு ஒன்றின் தலைவராக விஜய் சேதுபதி நடிப்பதாக முன்பே செய்திகள் வெளியாகியிருந்தது.

தற்பொழுது இந்த படத்தில் விஜய் சேதுபதி 8 வேடங்களில் நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முதல்பாதி முழுவதும் பழங்குடியின தலைவரான விஜய் சேதுபதி நகரத்துக்கு வரும் போது நடக்கும் காட்சிகளால் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் காட்டுக்குள்ளேயே காட்சிகள் நகர்வது போல கதையை உருவாக்கியுள்ளார். இதில்தான் விஜய் சேதுபதி பல வேடங்களில் நடிக்க வேண்டியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி 20 வயது இளைஞனாக நடித்துள்ளாராம். இந்த வேடங்களுக்காக 3 மேக்கப் மற்றும் சிகையலங்கார கலைஞர்கள் அடங்கிய தனிக்குழு ஒன்றினை நியமித்துள்ளார்களாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.