திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் மீண்டும் ஜோடி சேரும் விஜய் சேதுபதி - அஞ்சலி! 

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி - அஞ்சலி இருவரும் மீண்டும் ஜோடி சேரும் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2018, 7:16 pm IST

சென்னை: இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி - அஞ்சலி இருவரும் மீண்டும் ஜோடி சேரும் தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.என்.ராஜராஜனின் 'கே புரொடக்ஷன்ஸ்' மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 'ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ்' ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்கள்.

விஜய் சேதுபதியை வைத்து முன்னரே  ‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய இரு படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இந்த புதிய படத்தினை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இறைவி படத்திற்குப் பிறகு இவர்களிருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.   

படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் லிங்கா நடிக்கிறார். முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தின் துவக்க விழா ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது என்று தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.