பாகுபலிக்குப் பிறகு பாகமதியைத் தவிர அதிகப் படங்களில் அனுஷ்கா நடிக்கவில்லை. பாகுபலியின் பெரும் வெற்றியும் வரவேற்பும் உற்சாகம் அளித்தாலும் அதனைத் தொடர்ந்து அவர் கேட்டு வந்த பல கதைகள் அனுஷ்காவின் மனதைக் கவரவில்லை.

தற்போது பெண் மையக் கதையொன்றில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. ‘சைலண்ட்’ என்ற பெயரில் உருவாகவிருக்கும் இப்படத்தை ஹேமந்த் மதுகர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் இயக்கவிருக்கிறார். இப்படத்தை ப்ளூ பிளானெட் எண்டெர்ட்யின்மெட் சார்பில் கிரண் ரெட்டி, பரத் செளத்ரி மற்றும் பீப்பிள் மீடியா ஃபாக்டரி விஸ்வ பிரசாத் ஆகியோர் தயாரிக்கின்றனர். கோணா வெங்கட் மற்றும் கோபி மோகன் திரைக்கதை எழுதுகின்றனர்.

நீண்ட இடைவெளிக்கு பின் அனுஷ்காவுக்கு மாதவன் ஜோடியாக நடிக்கிறார். அனுஷ்கா தமிழில் அறிமுகமான ரெண்டு படத்தில் அவருக்கு ஜோடி மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது. திரில்லர் ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்தில் வசனங்கள் இல்லை. சியாட்டலில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பில் ஹாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்க இயக்குநர் மதுகர் பேசி வருகிறார் என்றனர் படக்குழுவினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹார்ட் பீட் 3: ரீனாவும் அர்ஜுனும் ஒன்று சேர்கிறார்களா?

7,000mAh அதீத பேட்டரி... ரியல்மி 16 எக்ஸ் விற்பனை தொடக்கம்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வாரா துருவ் ஜுரெல்?

வரலட்சுமி விரதம் எப்போது?
விடியோக்கள்

கருணாநிதி,கண்ணதாசன் நட்பும் பிரிவும்| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -3



