தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரத் தயாராகும் கோலிவுட் பிரபலம்!

ஒரு நடிகையாக தனக்கு அவர் மீது இரக்கம் இருப்பதால், தனது தயாரிப்பில் வெப் சீரிஸ்களிலோ, சின்னத்திரையிலோ நடிக்க ஸ்ரீரெட்டி விரும்பினால் வாய்ப்புத் தரத் தயாராக இருப்பதாகவும்’ குட்டி பத்மினி தெரிவித்திருக்க

News image
Updated On :27 ஜூலை 2018, 4:45 pm IST

ஸ்ரீரெட்டி விவகாரம் டோலிவுட்டில் சற்றே ஓய்ந்து விட்ட நிலையில் தற்போது கோலிவுட்டில் மையம் கொண்டுள்ள ஸ்ரீரெட்டி குறித்து இங்குள்ள பிரபலங்கள் வாய் திறக்கத் தொடங்கியுள்ளனர். நடிகை த்ரிஷா முன்னதாக, ஸ்ரீரெட்டிக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு அவரைப் பிரபலமாக்கத் தேவையில்லை என்றிருந்தார். பிரபல சின்னத்திரை நடிகை சோனியா, ஸ்ரீரெட்டி ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்புவதெல்லாம் நம்பக் கூடியதாக இல்லை என்றார். நடிகர் கார்த்தி, ஸ்ரீரெட்டி தனது புகார்களை ஆதாரத்துடன் காவல்துறையிடம் அளிக்க வேண்டுமே தவிர இப்படி ஊடகங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளியிட்டு பரபரப்புக் கிளப்புவது தேவையற்ற வேலை என்று கருத்துக்கூறியிருந்தார். இந்நிலையில் இவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஸ்ரீரெட்டியும் சளைக்காமல்;

‘நடிகர் சங்கம் என்ற ஒரு அமைப்பு இருக்கும் போது அங்கே அழைத்து விசாரிக்காமல் தன்னை காவல்துறையை நாடச் சொன்னால்ம் பிறகு நடிகர் சங்கம் என்ற அமைப்பு எதற்கு?’ என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் சங்கக் காரியக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவராகவும், பிரபல சின்னத்திரை தயாரிப்பாளராகவும் இயங்கி வரும் நடிகை குட்டி பத்மினி ஸ்ரீ ரெட்டி விவகாரம் குறித்து முதல்முறையாக வாய் திறந்திருக்கிறார். அவர் ஸ்ரீரெட்டி குறித்துக் கூறிய விஷயங்கள்.

’அந்தப் பெண்ணை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. அவர் கூறுவது உண்மை தான். திரையுலகில் வாய்ப்புக்காக பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவது பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிழை தான். ஆனால், அவர் முதல் முறை தவறு நடக்கும் போதே அதைக் குறித்து புகார் அளித்திருக்க வேண்டும். முதல் முறை தவறியிருந்தால் இரண்டாம் முறையாவது புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் ஸ்ரீரெட்டியோ வரிசையாக பலரை தன்னுடன் இருக்க அனுமதித்து விட்டு அதை ஆதாரங்களுடன் பதிவாகச் சேகரித்து வைத்துக் கொண்டு இப்போது தினம் ஒருவர் மீது பாலியல் குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை என்கிறார்.

அத்தோடு ஒரு நடிகையாக தனக்கு அவர் மீது இரக்கம் இருப்பதால், தனது தயாரிப்பில் வெப் சீரிஸ்களிலோ, சின்னத்திரையிலோ நடிக்க ஸ்ரீரெட்டி விரும்பினால் வாய்ப்புத் தரத் தயாராக இருப்பதாகவும்’ குட்டி பத்மினி தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.