திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் இணைந்திருக்கும் காமெடி நடிகர் இவர்தான்!

காலாவின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பெயரிடாத படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:26 pm IST

காலாவின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பெயரிடாத படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். ஜிகர்தண்டா, இறைவி ஆகிய வெற்றி படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், ரஜினியுடன் இணைந்திருப்பது இருவர் ரசிகர்களையும் பெரும் எதிர்ப்பார்க்கு உள்ளாக்கிவிட்டது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

அண்மையில் டெராடூனில் படப்பிடிப்பு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது காமெடி நடிகர் முனீஸ்காந்த் இந்தப் படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. முண்டாசுபட்டி, மாநகரம் உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய வித்யாசமான நகைச்சுவை மற்றும் உடல்மொழியால் ரசிகர்களை கவர்ந்தவர். ரஜினி காந்த் படத்தில் முனீஸ்காந்த் நடிப்பது இதுவே முதல் முறை. போலவே முதல் முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விரைவில் படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வமான செய்தி வெளிவரும் என்றனர் படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.