பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் இணைந்திருக்கும் காமெடி நடிகர் இவர்தான்!

காலாவின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பெயரிடாத படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

News image
Updated On :14 ஜூன் 2018, 5:43 pm IST

காலாவின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பெயரிடாத படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். ஜிகர்தண்டா, இறைவி ஆகிய வெற்றி படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், ரஜினியுடன் இணைந்திருப்பது இருவர் ரசிகர்களையும் பெரும் எதிர்ப்பார்க்கு உள்ளாக்கிவிட்டது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

அண்மையில் டெராடூனில் படப்பிடிப்பு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது காமெடி நடிகர் முனீஸ்காந்த் இந்தப் படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. முண்டாசுபட்டி, மாநகரம் உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய வித்யாசமான நகைச்சுவை மற்றும் உடல்மொழியால் ரசிகர்களை கவர்ந்தவர். ரஜினி காந்த் படத்தில் முனீஸ்காந்த் நடிப்பது இதுவே முதல் முறை. போலவே முதல் முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விரைவில் படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வமான செய்தி வெளிவரும் என்றனர் படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.