தான் நடிக்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பான நடிப்பாற்றலை வழங்கி ரசிகர்களை மகிழ்விக்கும் ஆற்றல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உண்டு. ரஜினி, விஜய், தனுஷ் ஆகியோரைத் தொடர்ந்து குழந்தைகளைக் கவர்ந்த ஹீரோ அவர்.
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னால் சின்னத் திரையில் தோன்றி ரசிகர்களின் மனங்களை கவர்ந்துவிட்டவர் அவர். சிவகார்த்திகேயன் தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பேரும் புகழும் பெற்ற நிலையில் சிவகார்த்தியேனுக்கு ஒரு மனக்குறை இருந்துவந்தது. அது என்னவெனில், தான் சம்பாதித்து தனது தந்தைக்கு எதுவுமே வாங்கிக் கொடுத்ததில்லை என்பதுதான். மேலும் அவரின் பாசமிகு தந்தையுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என்பதும் அவர் மனத்தில் நீண்ட நாட்களாக உள்ள குறை. ஒரு விருது வாங்கும் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் இவ்விஷயங்களைப் கூறி, இந்த விருதை தான் பெறுவதைப் பார்த்து மகிழ என் தந்தை உயிருடன் இல்லை என்று கண்கலங்க ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
2014 Best entertainer award
mdashKirukals kikikikikirukalsMarch 14, 2018
The day u cried for this moment. couldn made this true on that day. But Tried to make ur tears into smile and Ur dream come true by this artwith lots of love for SivaKartikeyanpic.twitter.com/bi
அந்த நிகழ்ச்சியைப் பார்த்த அவரது ரசிகர் ஒருவர், சிவகார்த்திகேயன் மைக்கில் பேசிய புகைப்படத்தை எடுத்து, சிவகார்த்திகேயனின் தோளில் அவரது தந்தை ஒரு கை போட்டபடி ஓவியமாக வரைந்து, சிவகார்த்திகேயனுக்கு பரிசளித்துள்ளார். ஓவியத்தைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த சிவகார்த்திகேயன் அந்த ரசிகருக்கு ட்விட்டரில் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
I don know how to thank u feeling very happy and emotional its been sad for me that i missed to take a good pic with appathis one wil be very splthanks again maதà¯à®¯à¯à®µà®à¯à®à®³à¯ à®à®²à¯à®²à®¾à®®à¯ தà¯à®±à¯à®±à¯à®ªà¯à®ªà¯à®à¯à®®à¯ தநà¯à®¤à¯ à®à®©à¯à®ªà®¿à®©à¯ à®®à¯à®©à¯à®©à¯https://t.co/m
mdashSivakarthikeyanivaKartikeyanMarch 14 2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதி கைது! காவல் வாகனத்தில் தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்!

ஆடிப்பெருக்கு: மகாதானபுரம் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!
உதயநிதி கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் முழக்கம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



