மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆபாசமான படங்களுக்குத் துணை போகும் தயாரிப்பாளர்கள் சங்கம்: இயக்குநர் பாரதிராஜா குற்றச்சாட்டு!

இலைமறைக் காயாகச் சொல்லப்பட்ட விஷயங்களை இன்று இலை போட்டுப் பரிமாறுகிறார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா...

News image
Updated On :7 மே 2018, 9:55 am

எழில்

இலைமறைக் காயாகச் சொல்லப்பட்ட விஷயங்களை இன்று இலை போட்டுப் பரிமாறுகிறார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது:

சமீபகாலங்களாக சில தரங்கெட்ட படங்களால் நம் தமிழ்நாடு தரமிழந்து கிடக்கிறது. இலக்கியமும் இதிகாசமும் சராசரி மனித வாழ்க்கையையும் கொண்டாடிய நம் திரைப்படங்கள் இன்று சதையை மட்டுமே கொண்டாடுகின்றன. சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்திய திரைப்படங்கள் இன்று இரட்டை அர்த்த வசனங்களால் மலிந்து போய்க் கிடக்கின்றன. கொண்டாட வேண்டியத் திரைப்படங்கள் இன்று கொள்கையற்றுக் கிடக்கின்றன. இலைமறைக் காயாகச் சொல்லப்பட்ட விஷயங்களை இன்று இலை போட்டுப் பரிமாறுகிறார்கள். தாழ்ந்த உருவாக்கங்களால் தலை குனிகிறது நம் திரைப்படத்துறை. 

தமிழ் மக்களே, ரசனை மாற்றமென்று தரங்கெட்டுப் படைக்கும் படைப்புகளைப் பார்ப்பதைப் புறக்கணியுங்கள். சமீபத்தில் வெளியான முடை நாற்றமடைக்கும் ஒரு திரைப்படம், நம் தமிழ்நாட்டு இளைஞர்களைத் திசை திருப்பி, நம்முடைய ரசனையை மழுங்கடித்து, தற்போதைய தமிழகத்தின் பிரச்னைகளை மறக்கச் செய்யும் தந்திரமாகவே இது தெரிகிறது. இவர்களுக்குத் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் துணை போவதால்தான் ஆபாசமான திரைப்படங்களுக்கும் தலைப்புகளுக்கும் அனுமதி கிடைக்கின்றன. காரணம், தமிழர்களின் கலாசாரம், பண்பாடு தெரியாதவர்கள் பதவியில் இருந்தால் இப்படித்தான் நடக்கும். ஏன் இதற்கு மேலேயும் நடக்கும். இதற்கு ஒரு முடிவு கட்ட நாள் குறிக்க வேண்டும். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சென்சார் போர்டு என்ன செய்துகொண்டிருக்கிறது? சரியான விஷயங்களுக்குக்கூட கத்திரி போட்ட நீங்கள் சமீபகாலமாக ஆபாசமான படங்களுக்கு அனுமதியளிப்பது ஏன்? இரண்டாம் தரமான படைப்புகளை மறுபரிசீலனை செய்யுங்கள். இல்லையென்றால் சென்சாரையே சென்சார் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

பாரதிராஜா தன்னுடைய அறிக்கையில் எந்தவொரு படத்தையும் குறிப்பிடவில்லையென்றாலும் ஆபாசமான வசனங்களுக்காகச் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள கெளதம் கார்த்திக் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து படம் குறித்த அவருடைய கருத்தாகவே இது பார்க்கப்படுகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.