ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?

ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்த வரலாறு கொண்டது பெரம்பூர் தொகுதி என்பது பற்றி..

News image

பெரம்பூர் - கோப்புப்படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 6:09 am

2026 தேர்தலில் அதிகம் கவனம் பெறும் தொகுதிகளில் முதலிடத்தில் இருப்பது பெரம்பூர். இந்த தொகுதி, ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்யும் வரலாறு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1957ஆம் ஆண்டு பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் இரண்டு எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு எம்எல்ஏ பொதுப் பிரிவினராகவும், மற்றொரு எம்எல்ஏ பட்டியலினத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தார்.

ஒரே தேர்தலில் ஒரே தொகுதிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டனர். நாடு சுதந்திரம் அடைந்த தொடக்கக் காலத்தில், பட்டியலின மக்களின் பிரதிநிதிகள் தேர்வு செய்ய அப்போதைய தேர்தலில் இந்த நடைமுறை இருந்து வந்துள்ளது. பிறகுதான், பட்டியலின தொகுதிகள் என பிரிக்கப்பட்டன. அதன்பிறகு 1961ஆம் ஆண்டு ஒரு தொகுதிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் தேர்வு செய்யும் நடைமுறை கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக அதிக கவனம் பெறும் தொகுதிகளில் பெரம்பூர் அருகே உள்ள கொளத்தூர் தொகுதிதான் இருக்கும். இந்த முறை தவெக தலைவர் விஜய் வருகையால் பெரம்பூர் தொகுதி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தன்னுடைய அரசியல் வருகையைப் பதிவு செய்ய தவெக தலைவர் விஜய் பெரம்பூருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில், தன்னுடைய கோட்டையாக இருக்கும் பெரம்பூரை விட்டுக்கொடுக்கக் கூடாது என திமுகவும் மறுபுறம் களமாடி வருகிறது.

பல முக்கிய நகரங்களில் தேர்தல் பிரசாரங்களை அறிவித்துவிட்டு ரத்து செய்து வரும் தவெக தலைவர் விஜய், தான் போட்டியிடும் தொகுதியில் மட்டும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்துவிட்டு, அங்குள்ள வீடுகளில் விசில் கோலமும் போட்டுள்ளார்.

தவெக சார்பில் கிட்டத்தட்ட 25 முதல் 50 பேர் வரை கொண்ட 15 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர், வழக்கமான பிரசாரத்தைக் காட்டிலும் இந்த முறை கூடுதல் நேரம் பணியாற்றி தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். ஒருவேளை, பெரம்பூரில் திமுக தோல்வியடைந்தால், அது ஒரு தொகுதியை இழந்ததாக ஆகாது, மாறாக, மாநிலத்தில் திமுகவுக்கு ஒரு புதிய போட்டியாளர் உருவாகியுள்ளார் என்பதை பேரவையில் உரக்கச் சொல்வதாக மாறிவிடும் என்பதே திமுகவுக்கு உள்ள நெருக்கடி என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.