தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

திருநங்கை தாயாக விரும்பினால்? அது சாத்தியமா?

திருநங்கை தாயாக விரும்பினால்? அது சாத்தியமா? என்பதே திரு தாய் அவளே குறும்படத்தின் ஒரு லைன் கதை

News image
Updated On :5 நவம்பர் 2018, 10:51 am IST

திருநங்கை தாயாக விரும்பினால்? அது சாத்தியமா? என்பதே திரு தாய் அவளே குறும்படத்தின் ஒரு லைன் கதை திருநங்கையாக தர்ம துரை படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும், அவள் நங்கை குறும்படத்தில் பிரதான வேடத்திலும் நடித்த ஜீவா சுப்ரமணியனும், கவண் படத்தில் பாவனா கதாபாத்திரத்தில் திறமையாக நடித்திருந்த பிரியா ராஜ்குமாரும் இந்தக் குறும்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

Story image

குழந்தையின் அருமையெல்லாம் உனக்கு எங்கே தெரியப் போகிறது என்று பெற்றோரால் உதாசினப்படுத்தப்படும் ஜீவா, குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா? என்று தனக்கு தெரிந்த மருத்துவரான பிரியாவிடம் சென்று விசாரிக்கிறார். சில நிமிட யோசனைக்கு பிறகு அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று மருத்துவர் கூறிவிட்டு வாடகை தாய் விதி முறைகளை ஜீவாவிடம் கூறுகிறார். வாடகை தாயாய் இருப்பதற்கு ஜீவா சம்மதித்தாரா? கருவை சுமந்து குழந்தையை ஈன்றெடுத்தாரா? என்பதே கதை.

திரைக்கதை, இயக்கம், நடிப்பு என அனைத்தும் சிறப்பாக உள்ளது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு அருமை. பின்னணி இசை நன்றாக உள்ளது. பின்னணி இசையில் இன்னமும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்தக் கதையில் ஜீவாவும், பிரியா ராஜ்குமாரும் நடிக்க சம்மதித்து சிறப்பான நடிப்பையும் வழங்கியிருப்பது இதுபோன்ற வளரும் இயக்குநர்களுக்கு மேலும் நம்பிக்கை அளிக்கும்.

Story image

படத்தை இயக்கிய பிரவீன் கூறுகையில், 'இந்தக் கதையை இயக்குவது சற்று சவாலாக இருந்தது. எனது நண்பர்கள் மற்றும் படக் குழுவினரின் முயற்சியால் சாத்தியமானது. மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற திருநங்கைகள் குறும்பட விழாவில் இந்தப் படம் தேர்வாகி திரையிடப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை ஜீவா பெற்றார்.

Story image

மேலும் சில பிரிவுகளில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. மேலும், பல குறும்பட விழாக்களுக்கு படத்தை அனுப்ப இருக்கிறேன்' என்றார். ஜீவா கூறுகையி்ல், 'இதுவரை ஏற்காத கதாபாத்திரம் இது. பிரவீன் கதையைக் கூறியதும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஒப்புக் கொண்டேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.