10 வருடங்களுக்கு முன்பு சொன்னதை தான் இப்போதும் சொல்கிறேன், உண்மை மாறாது - நானா படேகர்

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் நானா படேகர் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தார். 
10 வருடங்களுக்கு முன்பு சொன்னதை தான் இப்போதும் சொல்கிறேன், உண்மை மாறாது - நானா படேகர்
Updated on
1 min read

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் நானா படேகர் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தார். 

இதுதொடர்பாக, அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது, 

"இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் பேச வேண்டாம் என்று எனது வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். தனுஸ்ரீ தத்தாவுக்கு சட்ட ரீதியிலான நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அந்த நடைமுறைகள் முடியும் வரை இந்த வழக்கு தொடர்பாக என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. 10 வருடங்களுக்கு முன்பு சொன்னதை தான் இப்போதும் சொல்கிறேன். உண்ணை மாறாது" என்றார். 

அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், நானா படேகர் கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற திரைப்படப் பிடிப்பில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ புகார் தெரிவித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து, அவருக்கு இந்த விவகாரத்தில் பல நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர். அப்போது சிலர் மட்டும், சட்ட ரீதியில் நானா படேகருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வியெழுப்பினர். 

இதையடுத்து, மும்பை (மேற்கு) ஓஷிவாரா காவல் நிலையத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் அளித்தார். அந்தப் புகாரில் அவர் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சாமி சித்திக், இயக்குநர் ராகேஷ் சாரங் மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மன் தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோரது பெயரையும் அவர் இணைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com