சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இயக்குநர் சுசி கணேசன் மீது நடிகை அமலா பால் ‘மீ டூ’ புகார்!

இயக்குநர் லீனா மணிமேகலையைத் தொடர்ந்து நடிகை அமலா பாலும் இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றம் சாட்டியுள்ளார்...

News image
Updated On :24 அக்டோபர் 2018, 9:29 am

இயக்குநர் லீனா மணிமேகலையைத் தொடர்ந்து நடிகை அமலா பாலும் இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அண்​மைகால​மாகச் சமூகவலைத்​த​ளங்​க​ளில் மீ டூ எனும் தலைப்​பில் பெண்​கள் தங்​க​ளுக்கு நேர்ந்த பாலி​யல் துன்​பு​றுத்​தல்​க​ளை​யும், கொடு​மை​க​ளை​யும் பகிர்ந்து வரு​வது பர​வ​லாகக் கவ​னத்​தைப் பெற்று வரு​கி​றது. குறிப்​பாக, சில முக்கிய பிர​மு​கர்​க​ளுக்கு எதி​ராக முன்​வைக்​கப்​ப​டும் குற்​றச்​சாட்​டு​க​ளும் பெரும் பர​ப​ரப்பை ஏற்​ப​டுத்தி வரு​கின்​றன.

இயக்குநர் சுசி கணேசன் மீது புகார் தெரிவித்துள்ளார் கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை. காரில் வைத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து ஃபேஸ்புக்கில் கவிஞர் லீனா மணிமேகலை தெரிவித்த புகார் தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடந்துள்ளார் இயக்குநர் சுசி கணேசன்.

இந்நிலையில், நடிகை அமலா பால் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை நான் ஆதரிக்கிறேன். பெண்கள் மீது குறைந்த மரியாதை கொண்டுள்ளவரிடம் அவருக்கு என்ன நேர்ந்திருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது. 

திருட்டுப் பயலே 2 படத்தின் கதாநாயகியாக இருந்தும் இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சுக்கள், யாருக்கோ அவர் கூறும் அழைப்புகள், காரணமின்றி உரசியபடி பேசுவது என நானும் பல்வேறு சங்கடங்களைச் சந்தித்துள்ளேன். இதனால் திருட்டுப் பயலே 2 படத்தின் படப்பிடிப்பு அனுபவம் மன ரீதியாகச் சோர்வளித்தது.  இதைவைத்து லீனா மணிமேகலை என்ன பாடுபட்டிருப்பார் என்று புரிந்துகொள்ளமுடிகிறது.

ஆன்மிகத் துறையிலிருந்தும் கலைத் துறையிலிருந்தும் பல உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதேபோல மற்ற துறைகளிலிருந்தும் மீ டூ குறித்த பதிவுகள் வெளிவரவேண்டும். பெண்களுக்குத் தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் சட்ட ரீதியாக அமல்படுத்த வேண்டும். இவ்விதமானக் கட்டுப்பாடுகளே பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாகும் என்று கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.