கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சிம்பு, விஷால் என அடுத்தடுத்த படங்களை இயக்கவுள்ள சுந்தர்.சி

அரண்மனை 2, கலகலப்பு 2 ஆகிய படங்களைச் சமீபத்தில் இயக்கிய சுந்தர் சி. அடுத்ததாக இரு படங்களை...

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:43 pm

எழில்

அரண்மனை 2, கலகலப்பு 2 ஆகிய படங்களைச் சமீபத்தில் இயக்கிய சுந்தர் சி. அடுத்ததாக இரு படங்களை இயக்கவுள்ளார். 

சுந்தர் சி-யின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிம்பு. அவருக்கு ஜோயாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி, 2019 ஜனவரியில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கடுத்து, விஷாலை வைத்து அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார் சுந்தர் சி. இப்படத்தின் கதாநாயகியாக தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். சிம்பு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் இந்தப் படம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலும் தமன்னாவும் இதற்கு முன்பு, கத்திச்சண்டை என்கிற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.