அரண்மனை 2, கலகலப்பு 2 ஆகிய படங்களைச் சமீபத்தில் இயக்கிய சுந்தர் சி. அடுத்ததாக இரு படங்களை இயக்கவுள்ளார்.
சுந்தர் சி-யின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிம்பு. அவருக்கு ஜோயாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி, 2019 ஜனவரியில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கடுத்து, விஷாலை வைத்து அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார் சுந்தர் சி. இப்படத்தின் கதாநாயகியாக தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். சிம்பு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் இந்தப் படம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலும் தமன்னாவும் இதற்கு முன்பு, கத்திச்சண்டை என்கிற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


