காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

சிக்ஸ் பேக்கில் மாஸ் காட்டும் காமெடி நடிகர்

இசை வெளியீட்டு விழாவின் போது அவர் கூறியிருந்த நிலையில், சிக்ஸ் பேக்கில் மாஸ் காட்டும் சூரியின் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். 

Published On :

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் பொன்ராம் கூட்டணி 3-ஆவது முறையாக இணைந்துள்ள சீமராஜா திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சிக்ஸ் பேக்கில் மாஸ் காட்ட உள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய வெற்றிப் படங்களின் வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் பொன்ராம் கூட்டணி 3-ஆவது முறையாக இணைந்துள்ள படம் சீமராஜா. 

24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இசை - இமான், ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், பாடல்கள் - யுகபாரதி. தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. இப்படத்துக்குத் தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. 

செப்டம்பர் 13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் இப்படத்தில் நடித்துள்ள தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சூரி, புது அவதாரம் எடுத்துள்ளார். இதுதொடர்பாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அவர் கூறியிருந்த நிலையில், சிக்ஸ் பேக்கில் மாஸ் காட்டும் சூரியின் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், 8 மாத உழைப்புக்கு பின் சூரி சிக்ஸ் பேக்கில் மாறியுள்ளார். இப்புகைப்படத்தை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.