திருச்சியைச் சேர்ந்த அனு கீர்த்தி மிஸ் இந்தியா பட்டத்தைச் சமீபத்தில் வென்றார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை அனுகீர்த்தி இன்று சந்தித்தார். மிஸ் இந்தியா பட்டம் வென்றதற்காக முதல்வரிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார். இதன்பிறகு இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் அனுகீர்த்தி கூறியதாவது:
ஆமாம். இது மிகவும் ஆச்சர்யமானது. இன்று காலை தமிழக முதல்வரை நான் சந்தித்தேன். என்னுடைய வருங்காலத் திட்டம் குறித்து அவரிடம் விவாதித்தேன். முதல்வர் போன்ற ஒரு முக்கியமானவரிடம் இதுபற்றி விவாதித்தது எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.