ரூ.15 கோடி செலவழித்து கைவிடப்பட்ட 'விஜய்' படம்?

ரூ.15 கோலி செலவழித்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகரின் படம் முதல்கட்டப் படப்பிடிப்புடன் கைவிடப்பட்டது.
ரூ.15 கோடி செலவழித்து கைவிடப்பட்ட 'விஜய்' படம்?
Published on
Updated on
1 min read

ரூ.15 கோடி செலவழித்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகரின் படம் முதல்கட்டப் படப்பிடிப்புடன் கைவிடப்பட்டது.

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. ''ரௌடி'' எனும் அடைமொழியுடன் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் பெருகி வருகிறது. அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ''டியர் காம்ரேட்'' படம் ஜூலை 26-ல் திரைக்கு வரவுள்ளது. 

இதையடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் பைக் ரேஸ் வீரராக ''ஹீரோ'' எனும் படத்தில் நடித்து வந்தார். இதில் ஷாலினி பாண்டே, மாளவிகா மோஹனன் என இரு கதாநாயகிகள். ரூ.15 கோடி செலவில் முதல்கட்டப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது.

இந்நிலையில், பட அமைப்பு சரியாக அமையாதது மற்றும் இப்படத்தின் இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை படைப்பில் திருப்தி இல்லாத காரணத்தால் ''ஹீரோ'' படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com