அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகளினால் தொந்தரவு: எம்.எஸ்.தோனி போலீசில் புகார்  

காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகள் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள் என்று எம்.எஸ்.தோனி புகார் செய்துள்ளார்.

News image
Updated On :24 மார்ச் 2019, 2:19 pm IST

சென்னை: காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகள் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள் என்று எம்.எஸ்.தோனி புகார் செய்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் 12-ஆவது சீசன் சென்னையில் சனிக்கிழமையன்று துவங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சரஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகள் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள் என்று எம்.எஸ்.தோனி புகார் செய்துள்ளார்.

எம்.எஸ்.தோனி சார்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேலாளர் சென்னை தெற்கு காவல்துறை இணை ஆணையரிடம் இந்தப் புகாரினை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்காக அணி வீரர்கள் தற்போது அடையாறில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்கள்.

இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வரும் காவல்துறை உயர் அதிகாரிகளின் வாரிசுகள் சிலர்

எம்.எஸ்.தோனியுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல்வேறு சமயங்களில்  தொந்தரவு செய்கின்றனர். 

இவ்வாறு அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.தோனியின் இந்தப் புகாரானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.