25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

காப்பான் படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியீடு!

சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இரண்டாவது டிரெய்லர் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.

Published On :31 ஜனவரி 2024, 3:35 pm IST


சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இரண்டாவது டிரெய்லர் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது. 

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள காப்பான் படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து, ஞானகரவேல். தயாரிப்பு - லைகா நிறுவனம். செப்டம்பர் 20 அன்று வெளிவரவுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. இந்த டிரெய்லர் குறித்து சமூகவலைத்தளங்களில் இரு விதமாகவும் கருத்துகள் வெளியாகின. ஒரு தரப்பினர் நல்ல ஆக்‌ஷன் படமாக இருக்கப்போகிறது என்று கருத்து தெரிவித்தார்கள். அதேசமயம் எதிர்மறையான கருத்துகளும் வெளிவந்தன. டிரெய்லர் இன்னும் கூடுதல் சுவாரசியத்துடன் அமைந்திருக்கலாம். ஒருவேளை, படத்தின் ரகசியங்களை வெளியிடாதவாறு டிரெய்லரை வேண்டுமென்றே இவ்வாறு அமைத்திருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது டிரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். முன்னதாக, இதே டிரெய்லர் நேற்று தெலுங்கு மொழியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.