கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

காப்பான் படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியீடு!

சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இரண்டாவது டிரெய்லர் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.

News image
Updated On :14 செப்டம்பர் 2019, 8:16 pm IST


சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இரண்டாவது டிரெய்லர் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது. 

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள காப்பான் படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து, ஞானகரவேல். தயாரிப்பு - லைகா நிறுவனம். செப்டம்பர் 20 அன்று வெளிவரவுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. இந்த டிரெய்லர் குறித்து சமூகவலைத்தளங்களில் இரு விதமாகவும் கருத்துகள் வெளியாகின. ஒரு தரப்பினர் நல்ல ஆக்‌ஷன் படமாக இருக்கப்போகிறது என்று கருத்து தெரிவித்தார்கள். அதேசமயம் எதிர்மறையான கருத்துகளும் வெளிவந்தன. டிரெய்லர் இன்னும் கூடுதல் சுவாரசியத்துடன் அமைந்திருக்கலாம். ஒருவேளை, படத்தின் ரகசியங்களை வெளியிடாதவாறு டிரெய்லரை வேண்டுமென்றே இவ்வாறு அமைத்திருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது டிரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். முன்னதாக, இதே டிரெய்லர் நேற்று தெலுங்கு மொழியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.