நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு!

நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் மனித உடல் ஒன்று அழுகிய நிலையில் எலும்புக் கூடாகக் கிடந்தது குறித்து தெலங்கானா காவல்துறை விசாரித்து வருகிறது. 
நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு!
Published on
Updated on
1 min read

நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் மனித உடல் ஒன்று அழுகிய நிலையில் எலும்புக் கூடாகக் கிடந்தது குறித்து தெலங்கானா காவல்துறை விசாரித்து வருகிறது. 

தெலங்கானா மாநிலத்தின் மஹாபப்நகர் மாவட்டத்தில் பப்பிரெட்டிகுடா கிராமத்தில் நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீடு ஒன்று உள்ளது. 40 ஏக்கர் பண்ணை வீட்டை நாகார்ஜூனா சமீபத்தில் வாங்கியுள்ளார். பல வருடங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த பண்ணை வீட்டைச் சுத்தம் செய்ய பணியாளர்களை அனுப்பியுள்ளார் நாகார்ஜூனா. அப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஒரு பகுதியில் துர்நாற்றம் அடிப்பதைப் பணியாளர்கள் உணர்ந்துள்ளார்கள். இந்நிலையில் பண்ணை வீட்டின் பழையக் கட்டடம் ஒன்றின் அருகே மனித உடல் ஒன்று அழுகிய நிலையில் எலும்புக் கூடாகக் கிடப்பதை அவர்கள் கண்டுள்ளார்கள். இதையடுத்து பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவித்தார்கள். இதற்குப் பிறகு, கிராம நிர்வாக அலுவலர் காவல்துறையிடம் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற காவலர்கள், மோப்ப நாயுடன் சென்று எலும்புக்கூட்டைக் கைப்பற்றி, தற்போது இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்குக் கிடந்த எலும்புகள்  சேகரிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

கண்டெடுக்கப்பட்ட அழுகிய நிலையிலான எலும்புக் கூடு யாருடையது, அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் யாரோ ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்பு, இந்தப் பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com