தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிக் பாஸ் மதுமிதா தற்கொலை மிரட்டல்?: காவல்துறையிடம் புகார் அளித்த விஜய் டிவி!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நடிகை மதுமிதா, தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டிவி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2019, 12:28 pm

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நடிகை மதுமிதா, தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டிவி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 

இந்நிலையில் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த காரணத்துக்காகக் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் நடிகை மதுமிதா. நடிகை ஷெரின் மற்றும் இதர போட்டியாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக தன் கையைத் தானே அறுத்துக்கொண்டார் மதுமிதா. இதனால் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நடிகை மதுமிதா, தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டிவி நிர்வாகம் சென்னை - கிண்டி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. விஜய் டிவி நிறுவனத்தின் சட்டத்துறை மேலாளர் பிரசாத் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக மதுமிதா ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். பிறகு, ஒரு நாளைக்கு ரூ. 80,000 வீதம் மீதமுள்ள 42 நாள்களுக்கான பணத்தைத் திருப்பித் தருவதாகவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனாவுக்கு அளித்த குறுஞ்செய்தியில், பணத்தை இரு நாள்களில் தராவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் என அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.