பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்: இனி இவர்தான் புதிய முல்லை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சித் தொடரில் சித்ராவுக்கு அடுத்ததாக முல்லை வேடத்தில் நடிக்க காவ்யா தேர்வாகியுள்ளார்... 
படம் - instagram.com/kaavyaarivumanioffl
படம் - instagram.com/kaavyaarivumanioffl
Updated on
1 min read

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சித் தொடரில் சித்ராவுக்கு அடுத்ததாக முல்லை வேடத்தில் நடிக்க காவ்யா தேர்வாகியுள்ளார். 

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்அடிப்படையில், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்தை போலீஸார் கைது செய்து, பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர். 

2018 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார் சித்ரா. இந்நிலையில் தற்போது சித்ராவுக்குப் பதிலாக நடிகை காவ்யா, முல்லை கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரதி கண்ணம்மா தொடரில் நடித்துள்ளார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் நடிகை ஸ்ரீவித்யா இத்தகவலை இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார். டிசம்பர் 23 முதல் முல்லையாக காவ்யா அறிவுமணி நடிப்பார். சித்துவுக்கு மாற்று கிடையாது. ஆனால் முல்லைக்கு உண்டு. காவ்யாவுக்கு அனைவரும் ஆதரவு தெரிவியுங்கள் என்று ஸ்ரீவித்யா கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com