நயன்தாராவை வைத்துதான் அறம் 2 படத்தை எடுப்பேன்: இயக்குநர் உறுதி!
அறம் 2 படத்துக்காக கீர்த்தி சுரேஷை அணுகவில்லை என்று இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார்.


அறம் 2 படத்துக்காக கீர்த்தி சுரேஷை அணுகவில்லை என்று இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார்.
2017-ல் நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் வெளியான அறம் படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் வெளியான பிறகு இதன் அடுத்த பாகம் வெளிவரும் என்று தயாரிப்பாளர் கே. ராஜேஷ் கூறினார்.
இந்நிலையில் அறம் 2 படத்தை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கோபி நயினார் இயக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் ஒரு பேட்டியில் இதை மறுத்துள்ளார் கோபி நயினார். அவர் கூறியதாவது:
நயன்தாராவை வைத்துதான் அறம் 2 படத்தை எடுப்பேன். வேறு யாரை வைத்தும் அந்தப் படத்தை எடுக்கமாட்டேன். தற்போது வெளியான செய்தி வதந்தியாகும். இதனால் நான் கவலையில் உள்ளேன். கரோனா ஊரடங்கு காரணமாக படம் எப்போது தொடங்கும் என என்னால் இப்போது கூறமுடியாது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...