இயக்குநர் சுந்தர் சி - குஷ்பு ஆகிய இருவரும் திருமண நாளை இன்று கொண்டாடுகிறார்கள்.
திருமணமாகி 20 வருடங்கள் நிறைவடைந்தது பற்றி நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்ததாவது:
திருமணமாகி 20 வருடங்களாகிவிட்டன. துன்பம், சந்தோஷம் என எல்லாச் சூழல்களையும் ஒன்றாக இருவரும் எதிர்கொண்டுள்ளோம். கடந்த 20 வருடங்களாக எதுவும் மாறவில்லை. இப்போதுவரை நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் புன்னகையுடன் அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். திருமணத்துக்குத் தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள் தான் என எண்ணுகிறேன். அதுதான் நீங்கள். என் பலமாக உள்ள உங்களுக்குத் திருமண நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.