போதைப் பொருள் விவகாரம்: பிரபல நடிகை சஞ்சனா கல்ரானி கைது

பெங்களூரில் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை சஞ்சனா கல்ரானி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கல்ரானி
கைது செய்யப்பட்ட கல்ரானி

பெங்களூரில் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை சஞ்சனா கல்ரானி கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்துவதில் கன்னடத் திரையுலகினருக்கு தொடா்பிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணையில் தெரியவந்ததைத் தொடா்ந்து, நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. போதைப் பொருள் விற்பனையின் பின்னணியில் உள்ள கும்பலை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதில் கன்னடத் திரையுலகைச் சோ்ந்த பலருக்கும் தொடா்பிருப்பதாக கன்னட திரைப்பட இயக்குநா் இந்திரஜித் லங்கேஷ் கூறியதை தொடா்ந்து விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது. அதைத் தொடா்ந்து, கன்னட நடிகா்கள், நடிகைகள், திரைக்கலைஞா்கள், இசைக்கலைஞா்கள் மீதான கண்காணிப்பை போலீஸாா் தீவிரமாக்கியுள்ளனா். இது கன்னட திரைக்கலைஞா்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு தொடா்பாக கன்னடத் திரைக்கலைஞா்கள் உள்ளிட்டவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவு, ராகுல் ஷெட்டி, ரவிசங்கா், விரேன் கன்னா ஆகியோரை தொடா்ந்து நடிகை ராகினி திவிவேதியை செப். 4-ஆம் தேதி கைது செய்தது. அதைத் தொடா்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 3 நாள்கள் போலீஸ் காவலில் அவா் ஒப்படைக்கப்பட்டாா். பெங்களூரு, மடிவாளாவில் உள்ள மகளிா் சமரசத் தீா்வு மையத்தில் தங்கவைக்கப்பட்ட நடிகை ராகினி திவிவேதியிடம் 3 நாள்களாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி, பல முக்கிய சாட்சியங்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ராகினி திவிவேதிக்கு மேலும் 5 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி பெங்களூரு மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னடத் திரையுலகில் போதைப் பொருள் விநியோகம் செய்த கும்பலில், மேலும் ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா். கேரளத்தை பூா்விகமாகக் கொண்ட நியாஸ், கடந்த 5 ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறாா். ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த ரவிசங்கா், ராகுல் ஆகியோா் கொடுத்த தகவலின் பேரில், நியாஸ் கைது செய்யப்பட்டுள்ளாா். 

கைது செய்யப்பட்டுள்ள ராகுல் ஷெட்டி, ரவிசங்கா், ராகினி திவிவேதி, விரேன் கன்னா ஆகியோா் தெரிவித்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், கன்னட திரையுலகில் அடுத்தடுத்து பலா் கைது செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.

ராகுல் ஷெட்டிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் நடிகை சஞ்சனா கல்ரானிக்கும் போதைப்பொருள் விற்பனையில் சம்பந்தமிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதையடுத்து இந்திரா நகரில் உள்ள சஞ்சனாவின் வீட்டுக்கு நீதிமன்ற அனுமதி பெற்றுச் சென்ற மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் வீடு முழுவதும் இன்று சோதனை நடத்தினார்கள். அதைத் தொடா்ந்து, குற்றப்பிரிவு போலீஸாரின் அலுவலகத்துக்கு சஞ்சனாவை அழைத்துச் சென்று, அங்கு விசாரணை மேற்கொண்டனா். விசாரணைக்குப் பிறகு சஞ்சனா கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2006-ல் ஒரு காதல் செய்வீர் என்கிற தமிழ்ப் படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான சஞ்சனா கல்ரானி, பெங்களூரைச் சேர்ந்தவர். இதன்பிறகு ஏராளமான கன்னட, தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். இவருடைய சகோதரி நிக்கி கல்ரானி, டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கலகலப்பு 2 என பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com