கரோனா அறிகுறிகளுடன் பிரபல இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி

எஸ்.பி. முத்துராமனுக்கு கோவிட் நிமோனியா இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கரோனா அறிகுறிகளுடன் பிரபல இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

பிரபல இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1972-ல் கனிமுத்துப் பாப்பா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.பி. முத்துராமன். கடைசியாக 1995-ல் தொட்டில் குழந்தை படத்தை இயக்கினார். ரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.  

இந்நிலையில் கரோனா அறிகுறிகளுடன் எஸ்.பி. முத்துராமன் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி. முத்துராமனுக்கு கோவிட் நிமோனியா இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் எனத் தனியார் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com