தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிம்புவின் படத்துக்கு சிக்கல்?: 'கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்' - சிம்புவின் அம்மா வருத்தம்

நடிகர் சிம்புவின் படத்துக்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக அவரது அம்மா உஷா ராஜேந்தர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.  

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 12:22 pm

DIN

நடிகர் சிம்புவின் படத்துக்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக அவரது அம்மா உஷா ராஜேந்தர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.  

நடிகர் சிம்பு நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அன்பானவன், அடங்காதவன், அசராதவன்' படத்தின்போது, நடிகர் சிம்புவுக்கும், இந்தப் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்தப் பிரச்னை தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த வாரம், தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி, 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பில் பெப்சி அமைப்பு கலந்துகொண்டதாக தயாரிப்பாளர் சங்கம் குற்றச்சாட்டு தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கேட்டுக்கொண்டதன் பேரில், தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதி பெற்றே படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக தெரிவித்தார். இதனையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சி அமைப்பிற்கும் மோதல் உண்டாகும் சூழல் ஏற்பட்டது.  

இந்த நிலையில், நடிகர் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் பேசும் விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 'ஈஸ்வரன்' படத்துக்கும் பிரச்னை செய்தார்கள். வெந்து தணிந்தது காடு படத்தையும் துவங்கவிடவில்லை.  

நடிகர் சங்கத்துக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பிரச்சனை நடந்துகொண்டிருக்கும்போது பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அங்கே வரவேண்டிய அவசியம் என்ன ?  

இந்த கட்டப்பஞ்சாயத்து சரியாக தீர்க்கப்படவில்லை என்றால், பெப்சி அமைப்பினர் ஒத்துழைப்பு வழங்கப்படக்கூடாது என்பதற்காகவே ஆர்.கே.செல்வமணி அழைக்கப்பட்டிருக்கிறார் என்று அந்த வீடியோவில் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.