'அவன் - இவன்' பட வழக்கில் இருந்து இயக்குநர் பாலா நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா - விஷால் நடித்து கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் 'அவன் இவன்'. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், சொரிமுத்து அய்யனார் கோயில் பற்றியும் தவறாக சித்திரிக்கப்பட்டிருப்பதாக சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த சங்கராத்மஜன் என்பவரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஆர்யா தரப்பில் வருத்தம் தெரிவித்ததால், அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இயக்குநர் பாலா தரப்பு மீதான விசாரணை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர நீதிமன்றத்தில நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இயக்குநர் பாலா அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அப்போது மனுதாரார், பாலா மீதான தம் தரப்பு புகாரை முறையாக நிரூபணம் செய்யாததால் 'அவன் இவன்' பட வழக்கில் இருந்து இயக்குநர் பாலாவை விடுவித்து அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
“விருப்ப மனுக்கான ரூ. 50,000-ஐ திரும்ப பெற்றுக்கொள்க”.. - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

நெல்லையில் இன்று விஜய் பிரசாரம்: காலை முதல் ரசிகர்கள் குவியத் தொடங்கியதால் பரபரப்பு!
அட்லி - அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் பெயர்!

திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


