மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

“விருப்ப மனுக்கான ரூ. 50,000-ஐ திரும்ப பெற்றுக்கொள்க”.. - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

“விருப்ப மனுக்கான ரூ. 50,000-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம்” என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளதைப் பற்றி...

News image

கமல்ஹாசன் - (கோப்புப் படம்)

Updated On :8 ஏப்ரல் 2026, 11:40 am IST

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்காக வழங்கப்பட்ட ரூ. 50,000-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 2 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்த மக்கள் நீதி மய்யம், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், திமுக கூட்டணிக்கு நிபந்தனையின்றி ஆதரவு தருவோம், தேர்தலில் போட்டியிடவில்லை என்று கமல் தெரிவித்திருந்தார்.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டது. அதில், ஒரு விருப்ப மனுவுக்கு கட்டணமாக ரூ.50,000 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதனால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்த நிர்வாகிகள், நேர்காணலுக்கு அழைப்பார்கள் என காத்திருந்திருந்தனர்.

ஆனால், இந்த தேர்தலில் போட்டியில்லை என்று மார்ச் 23 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திடீரென தெரிவித்ததால், விருப்ப மனு அளித்திருந்த நிர்வாகிகள், ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

சுமார் 60 பேர் வரை விருப்பமனு அளித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் கட்சி நிதிக்கு சென்றுவிட்டதாகவும், இதனால் பணம் யாருக்கும் திருப்பி வழங்கபட மாட்டாது என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், விருப்ப மனுவுக்கு செலுத்திய ரூ. 50,000-ஐ வழங்கியிருந்த நிர்வாகிகள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும், இன்றுமுதல் (ஏப்.8) வருகிற ஏப். 16 ஆம் தேதிக்குள் கட்சி தலைமை அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தலைமை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Summary

Makkal Needhi Maiam has announced that the ₹50,000 paid as an application fee to contest the Assembly elections may be reclaimed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.