மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இந்தியன் 2 விவகாரம்: இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி...

News image
Updated On :2 ஜூலை 2021, 9:43 am

சென்னை, ஜூலை 2: இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வந்த இந்தியன் 2 திரைப்படத்தின்  படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி என். சதிஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா தரப்பில், திரைப்படத்துக்கு முதலில் ரூ. 150 கோடி  பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 236 கோடி வரை செலவு செய்துள்ளோம். ஆனால் இதுவரை 80 சதவீதப் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் ஷங்கருக்கு ஏற்கனவே ரூ. 32 கோடி  வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியத் தொகையை வழங்கவும் தயாராக உள்ளோம். கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இயக்குநர் ஷங்கர் தரப்பில், திரைப்படத்தைத் தயாரிக்க ரூ. 270 கோடி  செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியது. அதனை ஏற்று பட்ஜெட்டை ரூ. 250 கோடியாகக் குறைத்து, படப்பிடிப்பைத் தொடங்குவதில் தேவையில்லாத தாமத்தை ஏற்படுத்தியது லைகா நிறுவனம். மேலும் படப்பிடிப்புக்கு அரங்குகள் அமைத்து தருவது, நிதி ஒதுக்கீடு போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது. நடிகர் கமலுக்கு ஏற்பட்ட மேக் அப் அலர்ஜி, படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து, கரோனா பொதுமுடக்கம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினால் வரும் அக்டோபர்  மாதத்துக்குள் முடித்து கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இயக்குநர் ஷங்கர் வேறு படங்களை இயக்கத் தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.