25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

யோகி பாபு மகனின் பெயர் என்ன தெரியுமா ? - புகைப்படங்கள் பகிர்ந்த பிரபல இயக்குநர்

நடிகர் யோகி பாபுவின் மகனுக்கு பெயர் சூட்டும் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இயக்குநர் விருமாண்டி தனது முகநூல் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

Published On :28 ஜனவரி 2024, 9:14 am IST

நடிகர் யோகி பாபுவின் மகனுக்கு பெயர் சூட்டும் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இயக்குநர் விருமாண்டி தனது முகநூல் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் வெளியான 'கர்ணன்' மற்றும் 'மண்டேலா' படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன. இந்த இரண்டு படங்களிலும் வழக்கமான நகைச்சுவை வேடமாக இல்லாமல் குணச்சித்திர வேடத்தில் கலக்கியிருப்பார். இதனையடுத்து இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள நவரசா இணையத் தொடரில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள படத்தில் யோகி பாபு நடித்துள்ளார். . 

யோகி பாபுவுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 'க/பெ ரணசிங்கம்' பட இயக்குநர் விருமாண்டி இன்று (வியாழக்கிழமை) தனது முகநூல் பக்கத்தில் யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன்  எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவில், யோகிபாபுவின் மகனுக்கு விசாகன் எனப் பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து யோகி பாபுவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான படங்களான 'வலிமை', 'டாக்டர்', 'அரண்மனை 3', 'அயலான்' உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.