உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு: கமல் ஹாசன்

அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன்...
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு: கமல் ஹாசன்

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் 75-வது பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் பதிவு எழுதியுள்ளார் நடிகர் கமல் ஹாசன்.

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த வருடம் செப்டம்பர் 25 அன்று காலமானார். கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி.பி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 51 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரசிகர்களைத் தவிக்க விட்டு அவர் மரணமடைந்தார்.  

எஸ்.பி.பி.யின் 75-வது பிறந்த நாளான இன்று ட்விட்டரில் கமல் ஹாசன் கூறியதாவது:

அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்.பி.பி.க்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…’ என்று கூறி இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com