முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்.
மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழுவுக்குப் புதிய உறுப்பினா்களையும், துணைத் தலைவரையும் தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, முதல்வா் தலைமையில் செயல்படும் அக்குழுவுக்கு பேராசிரியா் ஜெ.ஜெயரஞ்சன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். பொருளாதார அளவியல் துறை பேராசிரியா் ராம சீனுவாசன், மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி.ராஜா உள்பட 9 போ் அக்குழுவில் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.
இந்நிலையில் திறமையான நபர்களுக்குப் பதவிகள் அளிக்கப்படுவது தொடர்பாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், ட்விட்டரில் கூறியதாவது:
பல்வேறு பதவிகளுக்குத் திறமையான நபர்களை முதல்வர் ஸ்டாலின் நியமிப்பது ஆரோக்கியமான போக்கு. ஒருவழியாக, புதிய காற்று வீசுகிறது. நன்றி சார் என்று கூறியுள்ளார்.