எடுத்தவரைக்கும் படம் நன்றாக வந்துள்ளது: சூர்யா 40 பற்றி இயக்குநர் பாண்டிராஜ்
எடுத்தவரைக்கும் நன்றாக வந்துள்ளது...


பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள 40-வது படம். பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு போன்றோர் நடிக்கிறார்கள். இசை - இமான். ஒளிப்பதிவு - ரத்னவேலு.
இயக்குநர் பாண்டிராஜின் சமீபத்திய படங்கள் போல இதுவும் வலுவான குடும்பக் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்தப் படம் இயக்குநர் பாண்டிராஜ், ட்விட்டரில் தெரிவித்ததாவது:
35% படம் முடிந்துவிட்டது. எடுத்தவரைக்கும் நன்றாக வந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்ததும் ஆரம்பித்துவிட வேண்டியதுதான். எங்கள் படக்குழு தயாராக உள்ளது. படத்தலைப்பு, பட அறிவிப்புடன் வெளியிடப்படும். ஜூலை வரை காத்திருங்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...