’நிறைய பிரச்னை தராங்க’ மேடையில் சிம்பு கண்ணீர் மல்க பேச்சு

மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியிருக்கிறார்.
’நிறைய பிரச்னை தராங்க’ மேடையில் சிம்பு கண்ணீர் மல்க பேச்சு
’நிறைய பிரச்னை தராங்க’ மேடையில் சிம்பு கண்ணீர் மல்க பேச்சு
Published on
Updated on
1 min read

மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியிருக்கிறார்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் நீண்ட இடைவெளிக்குப் பின் திரைக்கு வர இருக்கிறது. தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு  விழா நடந்து வருகிறது.

இதில் பேசிய நடிகர் சிம்பு திரைப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றியைத் தெரித்தப் பின்னர் திடீரென மேடையில் ‘ ரொம்பக் கஷ்டமா இருக்கு  , எனக்கு நிறைய பிரச்னை தராங்க , அதையெல்லம் நான் பாத்துக்குறேன் நீங்க என்னைப் பார்த்துக்கங்க’ என ரசிகர்களைப் பார்த்து கண்ணீருடன் பேச ஆரம்பித்தார்.

பின் மேடையிலிருந்தவர்கள் அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமைதிப்படுத்தினர்.

மாநாடு திரைப்படம் வருகிற நவ.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com