பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் நமீதாவுக்கும், தாமரை செல்விக்கும் பிரச்னை ஏற்படுவதுபோல் காட்டப்படுகிறது.
மற்ற சீசன்களைப் போல் அல்லாமல் இந்த சீசனில் பெரும்பாலான போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு அதிகம் பரீட்சையமில்லாதவர்கள். மேலும் இந்த முறை சன் டிவியில் ,மாஸ்டர் செஃப்,, ஜி தமிழில் ,சர்வைவர், என பிற நிகழ்ச்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துளன. இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியைக் காணும் ஆர்வம் ரசிகர்களிடையே குறைந்து இருந்தது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கிடையே மோதல் துவங்கியுள்ளதால் நிகழ்ச்சிக்கான விறுவிறுப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு போட்டியாளர்களும் தாங்கள் ஏன் வெற்றிபெற வேண்டும் என மற்ற போட்டியாளர்களின் முன்னிலையில் பேசி வருகின்றனர். அதற்கு ஒரு சிலர் மாற்று கருத்துக் கூற பிரச்னை எழத் துவங்கியது.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 8) வெளியான இரண்டாவது ப்ரமோவில் பேசும் நமீதா , 'நாளைக்கு வீட்டில் பெரிய சண்டை இருக்கிறது' என சொல்கிறார். மற்றொரு புறம் தாமரை செல்வியிடம், 'நீங்கள் உங்கள் ஊர் வழக்கு மொழியில் பேசுகிறீர்கள். அது தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது' என இமான் அண்ணாச்சி ஆறுதல் கூறுகிறார். பின்னர் சமாதானம் செய்கிறேன் என நமீதாவை இமான் அழைக்க, அதனை நமீதா மறுக்கிறார். இதனால் இந்த விவகாரம் பெரிய பிரச்னையை ஏற்படுததும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.