நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நயன்தாராவுக்கு ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் புகழாராம்!

ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் நயன்தாராவின் புகைப்படம் பகிர்ந்து புகழாராம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :13 அக்டோபர் 2021, 7:47 pm IST

ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் நயன்தாராவின் புகைப்படம் பகிர்ந்து புகழாராம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக கலக்கிக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. தமிழில் பெரிய கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் பிரபல கதாநாயகர்கள் படங்களிலும் நடித்துவிட்டார். தனி கதாநாயகியாக அறம், மாயா, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென தனிப்பட்ட வியாபராச் சந்தையை உருவாக்கியிருக்கிறார்.   

Story image

தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஹிந்திப் பட உலகிலும் கால்பதித்து விட்டார். ஹிந்தியிலும் முன்னணி நடிகையானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த நிலையில் ஃபோர்ப்ஸ் இந்தியா இதழின் அட்டையில் நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த நடிகையாக திகழ்வதாக புகழாரம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் நயன்தாரா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.