12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அப்பா தனுஷ் தேசிய விருது வாங்கும்போது பெருமையோடு பார்க்கும் மகன்கள் - விடியோ வைரல்

அசுரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷ் பெறும்போது அவரது மகன்கள் பெருமையோடு பார்க்கும் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

Published On :

67வது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று (அக்டோபர் 25) நடைபெற்று வருகிறது. விழாவில் நடிகர் தனுஷுக்கு அசுரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். 

Story image

விழாவில் பங்கேற்க தனுஷ் மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்களுடன் பங்கேற்றிருந்தார். மேலும், நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட நிலையில், அவரும் தனது மனைவி லதாவுடன் நிகழ்வில் கலந்துகொண்டார். 

Story image

இதனையடுத்து தனுஷ் விருது பெறும்போது அந்த நிகழ்வை அவரது மொத்த குடும்பத்தினரும் மிக பெருமையுடன் பார்த்தனர். குறிப்பாக அவரது மகன்கள் எழுந்து நின்று கைத்தட்டுகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Story image
Story image

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியிருந்த அசுரன் படத்தை தாணு தயாரித்திருந்தார். சிறந்த தமிழ்படத்துக்கான தேசிய விருதை தயாரிப்பாளர் தாணு பெற்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.