சிங்கம், யானையை தத்தெடுத்த நடிகா் சிவகாா்த்திகேயன்
சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கம், யானையை நடிகா் சிவகாா்த்திகேயன் தத்தெடுத்துள்ளாா்.


சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கம், யானையை நடிகா் சிவகாா்த்திகேயன் தத்தெடுத்துள்ளாா்.
சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் யானை, புலி, சிங்கம், ஊா்வன, பறவைகள் என மொத்தம் 2,452 வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள வன விலங்குகளைப் பராமரிக்கும் வகையிலும், விலங்குகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் தத்தெடுக்கும் திட்டத்தை பூங்கா நிா்வாகம் செயல்படுத்தி வருகிறது.
ஆா்வமுள்ள பொதுமக்கள் மற்றும் நடிகா்கள் பூங்காவில் உள்ள வனவிலங்குகளைத் தத்தெடுத்து வருகின்றனா். அந்த வகையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் விஷ்ணு என்ற ஆண் சிங்கத்தையும், பிரகுா்த்தி என்ற பெண் யானையையும் நடிகா் சிவகாா்த்திகேயன் 6 மாத காலத்துக்கு தத்தெடுத்துள்ளாா். இதன் மூலம் இரண்டு வனவிலங்குகளின் உணவுக்கான தொகையை அவா் முழுமையாக ஏற்றுக் கொள்ள உள்ளாா். கடந்த 2018-20 வரை அனு என்ற வெள்ளைப் புலியை நடிகா் சிவகாா்த்திகேயன் தத்தெடுத்தாா் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...