தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கணவனால் கைவிடப்பட்டு டாக்ஸி ஓட்டும் நிலைக்கு ஆளான சிம்பு பட நடிகை: பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்

சிம்புவின் 'வல்லவன்' பட நடிகை கணவனால் கைவிடப்பட்டு வாடகைக் கார் ஓட்டும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக நடிகர் காதல் சுகுமார் தெரிவித்துள்ளார். 

News image
சிம்பு
Updated On :23 செப்டம்பர் 2021, 1:07 pm

DIN

சிம்புவின் 'வல்லவன்' பட நடிகை கணவனால் கைவிடப்பட்டு வாடகைக் கார் ஓட்டும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக நடிகர் காதல் சுகுமார் தெரிவித்துள்ளார். 

சிம்பு கதாநாயகனாக நடித்து கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் வல்லவன். சிம்பு கதை, திரைக்கதை எழுதி இயக்கியருந்த இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தில்  நயன்தாரா, ரீமா சென், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் பள்ளி சீறுடையில் இருக்கும் பெண் ஒருவர் மீது சந்தானம் பேப்பர் ஒன்றை விட்டெறிந்து அந்தப் பெண்ணின் தோற்றத்தை விமரிசிப்பார். அந்தப் பெண் தற்போது வறுமையின் காரணமாக வாடகை கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார். 

Story image

இதுகுறித்து பிரபல நடிகர் காதல் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், வல்லவன் படத்தில் பள்ளி காட்சியில் சந்தானம் தாள் ஒன்றை எறிய அதை எடுக்கும் மாணவி, என்னா வெறும் பேப்பரை தூக்கி எறியுற, எதாச்சும் எழுதிக்குடு என்று அதகளம் பண்ணியிருக்கும். சமீபத்தில் நான் கதை நாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் ஒரு காட்சியில் நடிக்க கொடைக்கானல் வந்திருந்தாள்.  எனக்கு அடையாளமே தெரியவில்லை.

இன்னும் நன்றாக நடிக்கும் அவளுக்கு ஏனோ சரியான வாய்ப்புகள் அமையாமல் காதல் கல்யாணம் பண்ணியவளுக்கு இரண்டு பிள்ளைகள். இப்போது கணவனால் கைவிடப்பட்டு, வாடகைக் கார் ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். எல்லா கார்களையும் அனாசயமாக ஓட்டுகிறாள் முடிந்தவரை வாய்ப்புகள் வந்தால் சொல்வதாக சொல்லியிருக்கிறேன். வாயப்புகள் அமமையட்டும் லக்ஷ்மி'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.