செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

'சார்பட்டா பரம்பரை' பற்றி அன்றே பேசிய நடிகர் நாகேஷ் - விடியோ பகிரும் ரசிகர்கள்

பழைய படம் ஒன்றில் நடிகர் நாகேஷ், சார்பட்டா பரம்பரை குறித்து பேசியிருக்கும் விடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.  

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:18 am IST

பழைய படம் ஒன்றில் நடிகர் நாகேஷ், சார்பட்டா பரம்பரை குறித்து பேசியிருக்கும் விடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் 'சார்பட்டா பரம்பரை'. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க, பசுபதி, ஐான் விஜய், கலையரசன், சஞ்சனா, ஐான் கொக்கேன், அனுபமா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்தைப் பாராட்டி பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

1970களில் சார்பட்டா பரம்பரைக்கும் இடியப்ப பரம்பரைக்கும் இடையேயான குத்துச்சண்டை போட்டியில் யார் வெல்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை.

இந்த நிலையில் நடிகர் நாகேஷ் சார்பட்டா பரம்பரை குறித்து பேசும் பழைய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விடியோவில் சார்பட்டா பரம்பரைக்கும் இடியப்ப நாயக்க பரம்பரைக்கும் சண்டை என்பது போல் வசனம் பேசுகிறார். இதனை அன்றே கணித்தார் நாகேஷ் என இந்த விடியோவை ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.