மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

'கேஜிஎஃப் 2' படத்தைக் கைப்பற்றிய பிரபல தமிழ் தொலைக்காட்சி

'கேஜிஎஃப் 2' படத்தின் தென்னிந்திய தொலைக்காட்சி உரிமையை ஜி தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

Published On :


'கேஜிஎஃப் 2' படத்தின் தென்னிந்திய தொலைக்காட்சி உரிமையை ஜி தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 'கேஜிஎஃப்'. மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

குறிப்பாக இந்தத் திரைப்படம் குறித்த மீம்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த நிலையில் 'கேஜிஎஃப் 2' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம் என்பதால் நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்டால் மட்டுமே இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

Story image

இந்த நிலையில் இந்தப் படத்தின் தென்னிந்திய தொலைக்காட்சி உரிமையை ஜி தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது. இதன் படி 'ஜி தமிழ்', 'ஜி கன்னடா', 'ஜி தெலுங்கு', 'ஜி கேரளம்' ஆகிய தொலைக்காட்சிகளில் இந்தப் படத்தை காணலாம்.  'கேஜிஎஃப் 2' திரைப்படம் திரையரங்குகளிலேயே முதலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.