தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஒரே படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் - சூர்யா ?

கமல்ஹாசன் மற்றும் சூர்யா நடிக்க ஒரு படத்தை இயக்கவிருப்பதாக அமல் நீரட் தெரிவித்துள்ளதை சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

Published On :

கமல்ஹாசன் மற்றும் சூர்யா நடிக்க ஒரு படத்தை இயக்கவிருப்பதாக அமல் நீரட் தெரிவித்துள்ளதாக சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் உயிர் கொடுக்க கடுமையாக மெனக்கெடுவார். நடிகர் சூர்யாவும் அதற்கு சற்றும் குறைந்தவரல்ல. இருவரும் ஒரே படத்தில் இணைந்தால் அந்தப் படம் நிச்சயம் மிரட்டலாக இருக்கும். 

இந்த நிலையில் பிரபல இயக்குநர் சொன்ன தகவலால் இருவரின் ரசிகர்களும் உச்ச கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். மலையாள திரையுலகில் பிரபல இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் அமல் நீரட். இவரது இயக்கத்தில் உருவான 5 சுந்தரிகள், காம்ரேட் இன் அமெரிக்கா, வரதன் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

இந்த நிலையில் இயக்குநர் அமல் நீரட், நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சூர்யா இணைந்து நடிக்கும் வகையில் தான் கதை ஒன்று தயார் செய்திருப்பதாகவும், இருவரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு பக்கம் இந்தத் தகவலில் துளியும் உண்மை இல்லை எனவும் கூறப்படுகிறது.

டாக்ஸிவாலா நாயகி பிரியங்கா ஜவல்கர் போட்டோஷூட் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

இந்தத் தகவல் உண்மையாக இருந்தால் இருவரது ரசிகர்களுக்கும் அந்தப் படம் வெளியாகும் நாள் திருவிழாவாகத் தான் இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.