‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மீண்டும் இணையும் 'பருத்திவீரன்' கூட்டணி: இயக்குநர் அமீரின் அடுத்தப் படம் அறிவிப்பு

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ரமேஷ் கிருஷ்ணன் இயக்கும் படத்தில் இயக்குநர் அமீர் நடிக்கவிருக்கிறார். 

Published On :

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ரமேஷ் கிருஷ்ணன் இயக்கும் படத்தில் இயக்குநர் அமீர் நடிக்கவிருக்கிறார். 

இயக்குநர் அமீர் இதுவரை 4 படங்களை இயக்கியிருக்கிறார். அதில் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் ஆகியவை தமிழின் கிளாசிக் படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளன. மேலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களாகவும் இருக்கின்றன. 

இதனையடுத்து அமீர் இயக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்த நிலையில் இயக்குநர் அமீர் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அமீருடன் ஆர்யாவின் தம்பி சத்யா. சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண், தயா செந்தில்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

Story image
Story image

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கின்றார். இந்தப் படத்துக்காக யுவன் இசையில் சினேகன் எழுதியுள்ள ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Story image

இந்தப் படத்தை அதர்மம், பகைவன் ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணன் இயக்குகிறார்.  

இந்தப் படத்துக்காக நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குநர் அமீர், யுவன் ஷங்கர் ராஜா, ராம்ஜி, சினேகன் கூட்டணி இணையவுள்ளனர்.  இந்தப் படத்தை அமீர் ஃபிலிம் கார்பரேசன் மற்றும் ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.