குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

''தமிழ் சினிமாவுக்கு கிடைத்த...'': மாநாடு படம் குறித்து இயக்குநர் ஷங்கர் சொன்ன கருத்து

மாநாடு படத்தை பாராட்டி இயக்குநர் ஷங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :6 டிசம்பர் 2021, 12:32 pm IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா முதன்மை வேடத்தில் நடித்திருந்த மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. வசூலையும் வாரி குவித்து வருகிறது. 

இந்தப் படத்தை பாராட்டி பல்வேறு திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தப் படம் குறித்து இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், இயக்குநர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் புத்திசாலித்தனமான எழுத்து மற்றும் இயக்கத்தில் மாநாடு உருவாகியிருக்கிறது. சிலம்பரசன் கலக்கியிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா சிறப்பாக நடித்திருக்கிறார். 

Story image

யுவனின் இசை படத்தை வேறு தளத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பானவற்றை வழங்கியிருக்கிறார்கள். டைம் லூப் கதை நன்றாக வந்திருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொழுதுபோக்கு மற்றும் சிறந்த காட்சி அனுபவ திரைப்படம் இந்த மாநாடு என்று புகழ்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.