தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

விஜய் சேதுபதியுடன் இணையும் இயக்குநர் கௌதம் மேனன்: அதிகாரப்பூர்வ தகவல்

விஜய் சேதுபதியுடன் இயக்குநர் கௌதம் மேனன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :22 நவம்பர் 2021, 12:30 pm IST

'புரியாத புதிர்', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இதில் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'யாருக்கும் அஞ்சேல்' விரைவில் திரைக்குவரவிருக்கிறது. இந்த நிலையில் இவர் தனது அடுத்தப்பட அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். 

Story image

'மைக்கேல்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.