
'ஜெய் பீம்' படத்துக்காக நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது நடிகர் சிவகுமார் உடனிருந்தார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படங்களில் நடிகர் சூர்யா முற்றிலும் புதிய தோற்றத்தில் இருக்கிறார். இதனையடுத்து இந்தத் தோற்றம் சூர்யாவின் புதிய படத்துக்காக என்று கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிக்க | ஆங்கிலப் படத்தில் தமிழ் பெண்ணாக நடிக்கும் சமந்தா
நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ், வினய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...