பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி தீபாவின் இன்ஸ்டாகிராம் பக்க பதிவு வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யூடியூப் விமரிசகர் அபிஷேக் ராஜா. இவர் சமூக வலைதளங்களல் மிகப் பிரபலம். அவ்வப்போது சினிமா தகவல்களை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வழங்கிக்கொண்டிருந்தார். பிரபலங்களை தனக்கே உரிய பாணியில் நேர்காணல் நடத்தி எதிர்மறையான விமரிசனங்களை சந்தித்தார்.
இந்த நிலையில் அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி தீபா என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், நமக்கு ஒரு துக்கமான நிகழ்வு நடந்தால் அதில் இருந்து நம்மை நாமே வெளியே கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அப்படி இருந்தும் ஒரு சிலர் நம்மை வேண்டும் என்றே நம்முடைய கடந்த காலத்தில் ஒரு பகுதியைத் தூண்டி விடுவதால் நம்முடைய ஒரு நாள் அல்லது ஒரு வாரம் சோகமயமாகி விடுகிறது.
3 வருடங்களுக்கு முன் திருமண வாழ்க்கையில் இருந்து நான் விலக முடிவு செய்த போது, எல்லா செயல்களையும் நானே செய்துகொள்ள முடிவு செய்திருந்தேன். இது தனிப்பட்ட முடிவு. என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், திருமணமான புதிதில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தேன். அந்த பேட்டி விவாகரத்து ஆன பிறகு தான் அதிகமாக வைரல் ஆகி வருகிறது. எனவே அந்த பேட்டியை நீக்கி விடுங்கள் என்று கேட்டிருந்தேன். ஆனால் சம்மந்தப்பட்ட நிறுவனம் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் என்னுடைய முன்னாள் கணவர் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளதால் அவர் குறித்து தேடும்போதும் இந்த பேட்டி தான் வருகிறது. அந்த பேட்டி பற்றி என்னிடம் பலரும் பேசும்போது மிகவும் மன உளைச்சல் ஏற்படுகிறது. என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ‘சைவ திணிப்பு’: பாஜக அரசு மீது திரிணமூல் குற்றச்சாட்டு
‘இணையவழி குற்ற வழக்குகளில் விரைவான நடவடிக்கை’

ஆமைகள் மூலம் பண்டைய கடல் வழித்தடங்களை கண்டறியலாம்: வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு

சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: சென்னைக்கு மாற்றி உத்தரவு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



