குறைவான வாக்குகள் பெற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸில் முதல் வாரம் என்பதால் கடந்த வாரம் போட்டியாளர்கள் வெளியேற்றப்படவில்லை. இருப்பினும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த வாரம் நமிதா மாரி முத்துபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
தற்போது இரண்டாவது வாரம் என்பதால் இந்த வாரம் நிச்சயம் ஒரு போட்டியாளர் வெளியேறுவார். இந்த வாரம் எவிக்சனுக்காக நாதியா, நிரூப், இமான், இசைவாணி, பிரியங்கா, அபினய், அக்சரா, அபிஷேக் ஆகிய போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் போட்டியில் இருந்து வெளியேறக்கூடாது என்று மக்கள் நினைக்கும் போட்டியாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
இந்த நிலையில், அபிஷேக், சின்ன பொண்ணு மற்றும் அபினய் ஆகிய மூவருக்கும் மிகக் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த மூவரில் சின்ன பொண்ணு வெளியேறுவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.