கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

'உங்களுக்கு ராஜு முக்கியம்': பிக்பாஸில் கோபமாக பேசிய அபிஷேக், கண்டித்த பிரியங்கா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் அபிஷேக் ராஜா கோபமாக பேச, அவரை பிரியங்கா கண்டிக்கிறார். 

News image
Updated On :18 அக்டோபர் 2021, 10:32 am

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் அபிஷேக் ராஜா கோபமாக பேச, அவரை பிரியங்கா கண்டிக்கிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நாடியா சங் வெளியேறிய நிலையில் தற்போது 16 பேர் இருக்கின்றனர். உடல் நலக்குறைவு காரணமாக வெளியேறிய நமிதா மாரிமுத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கிறார். அதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிகிறார்கள். சிலை போல் நிற்கும் ஒரு அணியினரை மற்ற அணியினர் சிரிக்கவோ, உணர்ச்சிவப்படவோ வைக்க வேண்டும். 

இந்த நிலையில் இமான் அண்ணாச்சிக்கும் அபிஷேக் ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்படுத்துகிறது. இமான் அபிஷேக்கைப் பார்த்து, நீ புத்திசாலி என்று சொல்ல, அப்படி சொல்லி என்னை தனியாக்காதீர்கள். உங்களுக்கு ராஜு முக்கியம். எனக்கு வலு இருக்கிறது. நான் வெளியில் போய் எதாவது செய்துகொள்கிறேன். என்கிறார். அப்போது குறுக்கிடும் பிரியங்கா, அதெல்லாம் நீ பேசாதே என சொல்ல, நான் அப்படி தான் பேசுவேன் என அபிஷேக் பதிலளிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.