நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கோப்ரா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியீடு

நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

News image

கோப்ரா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியீடு

Updated On :16 ஏப்ரல் 2022, 7:10 pm IST

நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

கோப்ரா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில்  அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது படக்குழுவினரை அதிர்ச்சியடைச் செய்தது. 

இந்நிலையில் நடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு  கோப்ரா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  ஏற்கெனவே தும்பி துள்ளல் எனும் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மகான் திரைப்படத்திற்கு பிறகு வெளியாகும் நடிகர் விக்ரமின் திரைப்படம் என்பதால் இப்படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.